Sunday, July 31, 2016

ஆசான் அகத்தீசர் அருளிய துறையறி விளக்கம்

ஆசான் அகத்தீசர் அருளிய துறையறி விளக்கம்:

"பெட்டியிலே அடைத்து வைத்த 
பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் 
புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு
வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர
எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது
சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில்
கட்டும்வாசி
கட்டியின்கீழ் திருவாடுதுறைப்
பார்க்கில்
சூரியனும் சந்திரனும்
தோற்றமாமே."
-ஆசான் அகத்தீசர்


பெட்டி என்பது வயிறு, பாம்பு இடகலை பின்கலை சேர்ப்பது எனப்படும்.. எட்டு என்பது அகாரம், இரண்டு என்பது உகாரம்.. இது இரண்டையும் சேர்ப்பது நம்மால் சும்மா சுழிமுனையில் கும்பிக்கச் செய்ய முடியாது. இதற்கு ஆசான் முருகப்பெருமான் ஆசி வேண்டும். தினமும் ஞானிகளை பிரம்ம முகூர்த்தத்தில் பூசை செய்ய வேண்டும். பத்மாசனம் இட்டு ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.

மேலும் கருத்துக்களை அறிய ஞானத்திருவடி நூலை வாங்கி படியுங்கள்! குருநாதர் மகான் அரங்கமகாதேசிகர் அவர்கள் ஞானிகளின் பாடல்களுக்கு தான் உணர்ந்த இரகசியங்களை நம்பால் கருணை கொண்டு எளியமுறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். இது ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
ஓங்காரக்குடில் Ongarakudil
 Aum Muruga ஓம் முருகா 

No comments:

Post a Comment