Saturday, December 7, 2019

கேட்டால் பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்கலாம்

கேட்டால் பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்கலாம்

கேள் #பிறவாமை எனும் பெருஞ்ஞானம். கட பிறப்பு #அறியாமை எனும் பெருங்கடல்.
“பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறபென்னும்
செம்பொருள் காண்ப தறிவு”

-ஆசான் திருவள்ளுவர்.
ஆத்மா ஏற்றுக்கொண்ட கர்ம விளையாட்டில் #பிறந்து-இறந்து அவதிப்படுகின்றது. பிறப்பு-இறப்புச் சக்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க "பிறவாமை" எனும் பெருஞ்ஞானத்தை #வேண்டுதல்-வேண்டாமை கொண்ட #வாலறிவனிடம் ஆரம்பப்புள்ளியாக வழிபாட்டில் வேண்டுதல் வை. தொடர் பிறப்பை அறுப்பதற்கு அவன் வழி காட்டுவான். கேட்கும்வரை பிறவிப்பிணி தொடரும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை..!!!

முற்றுப்பெற்ற மகான் திருவள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் நாம் எதற்காவது ஆசைப்பட வேண்டும் என்றால் அது மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வாழும் பிறப்பு-இறப்பு சக்கர நிலையிலிருந்து விலகிப் பிறவாநிலை கிடைக்கவே ஆசைப்பட வேண்டும். அதற்காக முற்றுப்பெற்றவர்களை (இறைநிலை அடைந்தோரை) வேண்டுதல் செய்ய வேண்டும். ஏனெனில், முற்றுப்பெற்ற ஞானிகளான ஆசான் திருவள்ளுவப் பெருமான் போன்றோரின் கருத்துப்படி பிறப்பே நரகம். இந்தப் பிறவியை முற்றுப்பெற்ற சித்தபெருமக்கள் வழிகாட்டலின் கீழ் வெல்வதே சொர்க்கம். அதுவே பேரறிவு, பேரின்பம், வீடு பேறடைதல், மோட்சம், ஆன்ம விடுதலை, இறையுடன் இரண்டறக் கலத்தல், ஜோதி உடம்பு பெறல், மரணமிலாப் பெருவாழ்வு எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது. பிறவிப்பிணியை வென்ற மாபெரும் தலைவன், பொதுமறை தந்த அண்ணல் ஆசான் திருவள்ளுவப்பெருமானை வேண்டிப் பிறப்பென்னும் நரகத்தை வெல்வோம்.
“பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறபென்னும்
செம்பொருள் காண்ப தறிவு”
-ஆசான் திருவள்ளுவர்.

ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைமையில் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

ஆதி அகத்தியர் Aathi Agathiar

சித்தர் அறிவியல்





நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment