என் அகந்தையுணர்த்தி
என்னுளம் ஆட்கொண்டு
என்னுள இருள்நீக்கி
எனக்கு ஈந்து
எனதுயிர் உய்ய
எனது ஊழையறிவித்து
என்னூழ் எரித்து
என்னாத்மா ஏற்றம்பெற
என்னிலிருந்த ஐயமிறக்கி
என்னுயிருனுள் ஒருவனாகி
எனதருமை ஓங்காரனாகி
என் பிறவிப்பிணியின் ஔடதமாகி
என்னய்யன் குருமேவிய கும்பரே
என்னாசான் எனதாத்மாவின் தந்தையே
என்னை எனக்கறிவித்த விந்தையே
எந்தை விந்தைமிகு சத்சித் கடந்த சித்தரே
என்னகம் வாழ வழிதந்த குருமுனிவரே
என்னகத்தீசரே சரணம்., சரணம், சரணமப்பா..!
-Nàthàn கண்ணன் Suryà
15/03/2016
ஓம் அகத்தீசாய நம


No comments:
Post a Comment