Wednesday, May 15, 2019

ஞானம் என்பது ...

#ஞானம் - ஞானம் என்பது ஆன்மாவைப்பற்றி அறிதல்.



#ஆன்மா மாசுபட்டிருக்கிறது. புறஉடம்பு அல்லது தூலதேகம் மும்மலத்தால் ஆனது. தூலதேகத்தை, சூட்சுமத்தை ஆட்டிப் படைப்பது ஆன்மா. தூலதேகத்தையும் சூட்சுமதேகத்தையும் பற்றி அறிவதுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதாகும். தூலத்தைப் பற்றியது புற உடம்பு அல்லது காரிய தேகம். சூட்சுமம் என்பது அக உடம்பு அல்லது ஒளி உடம்பு அல்லது காரண தேகம். இதைப்பற்றி அறிதல் ஞானம். ஞானத்தைப் பற்றி அறிய முற்படுகின்ற மக்கள் வாசியைப்பற்றி அறிவது #யோகம். ஞானத்தைப் பற்றி அறிதல் என்பது வாசியைப் பற்றி அறிவதாகும். இதன் மூலமாக ஆறாதாரத்தை அறிய வேண்டும்.

-மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்






நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment