Saturday, November 19, 2016

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்

இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் உள. திருத்த முயற்சிக்கிறோம். நன்றிகள்.

பாகம் 1 & பாகம் 2(தொடர்ச்சி)
-கி. கோகுல கிருட்டிணன்.

பாகம் 1:

கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?


இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.




"அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்-

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-ஆசான் திருமூலர்-

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

நன்றி:
கி. கோகுல கிருட்டிணன்.
*****பாகம் 1முற்றும் *****

பாகம் 2:

ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?!

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்??

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா! இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்:

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-ஆசான் திருமூலர்-


இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன், பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன், அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே என்கின்றார் ஆசான் திருமூலர்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பார்ப்போம்...!

பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்து கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா; அதைபோன்று, அனால் சற்றுப் பெரிய அளவில்! .

பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..!

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.

தொடரும் என் ஆராய்ச்சி...

நன்றி:
கி. கோகுல கிருட்டிணன்.
------------------------------------------
இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் உள. திருத்த முயற்சிக்கிறோம். நன்றிகள்.

KIndly ignore the grammatical errors and read the context.ink emoticon Many Thanks.
Summarised in English for the benefit of English readers:

by Gokula Kridinan
follow us @ 
https://twitter.com/ongarakudil

What is the Higgs size and structure :

"#Thirumoolar" who has realised God within him, become immortal and lived for centuries(approx 2-6th AD) had written "#Thirumanthiram" in which he wrote about human life and how to achieve his life ambition of becoming #oneness with #God and secret of this ihad been revealed in his 3041 verse of Thirumanthiram.. As iam a reader of it, i have found something unusual in it, and here i am #sharing it.

மேவிய சிவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்

In the above verse he had said that the Lord #Shivan (#PARAMANU) also called as Atom's atom (atom within atom), or a sub atomic particle, to explain his size  he considers that a human hair which should be divided into 100 and then again dividing a single particle of 100th (1/100) into 1000 and then again by divinding that resulting single particle into 4000 results is the size of Lord Shivan (PARAMANU)or Atom's Atom (atom within atom).. now lets go in simple calculation.....

A Human hair which is about 30-80 Micron and now for this case considering it as 50 Micron

converting 50 Micron in mm

50 Micron = 0.05mm
now the human hair = 0.05 mm

now as per his saying just divide this with 100 as a first step

0.05 / 100 = 0.0005 mm

Now considering a single particle (i.e.,) 0.0005 mm , and dividing it with 1000 results in second step of it

0.0005 / 1000 = 0.0000005 mm

now again considering a resulting single part (i.e.,) 0.0000005 mm , divinding it with 4000 as per his saying results in the size of Shivan (PARAMANU- the master atom) or a Atom's atom .

0.0000005 mm / 4000 = 0.000000000125 mm

Now as per his saying , Lord Shivan or PARAMANU is about 0.000000000125mm in size does it is nearly equalent to higgs Particle ??

As extending my research , Thirumoolar who said about the size of Lord Shivan (Anupiran) as considered as Atom's Atom. nearly about the size of Higgs Boson particle which is around 10^-17 m , and now Thirumoolar would have also explained about the structure of Shivan (Anupiran). as in my search i found this exclusive lines from the "Thirumanthiram".

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்

The above tamil statement mean that , the one who is dissolved in everything in this world and seem as if he is not there anywhere and even not visible to common eyes , who Looks in golden colour with shaggedness of hair, he will not be visible until unthen some one in deep search of him, who will attract everyone like a glittering White moon.

This is his Translated form and here lord shivan who is also called a Sadamudiyan, sadaiyan(Shaggedness of hair) and even he mentioned that shaggedness of hair, and now what we do is just imagine a person in our eyes with shaggedness of hair, and we will colour him up with golden yellow , and now we will shrink him up nearly to an atomic level now imagine how he look like ok, now start browsing in internet about the images of Higgs Boson particle . everywhere you see is a Golden flame which look like shagged hair around it , if it is the structure of higgs boson in the internet, Does Thirumoolar saw him century's Ago ????

Research continues...!
*******************************
Following is a post by SiddhaGnanam (Wisdom of Siddhars)
***********************************

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்

விஞ்ஞான நோக்கம்:

ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson)” எது? என்ற சோதனை நடந்து வருகின்றது.

செயல்படும் முறை:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson) ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008

விளக்கம்:

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

மேற்கண்ட இருநிகழ்வுகளில் நோக்கமும், செய்முறையும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர். ஏனெனில் நாம் இதை தற்பொழுது “மதிப்பெண்களுக்காக” படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்

(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்தியர், ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீக கருத்துகளும் பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிரூபித்து எழுதினாரா? என்றால் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதி உயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. (எ.கா) அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை (General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை.

நன்றி: சித்தஞானம்


1 comment: