Wednesday, November 2, 2016

கலியுகத்தில் உண்மைக்குரு யார்..?! முற்றுப்பெற்ற சித்தர்வாக்கு.


#சித்தர்வாக்கு

மனிதர் கடைத்தேற குரு தேவை. அக்குரு முற்றுப்பெற்ற குருவாக இருத்தல் வேண்டும். முற்றுப்பெற்ற குரு ஞானபண்டிதனை அறிந்திருப்பார். முருகன் பெருமை பேசுவார். முருகனைச் சீடருக்கு குருவாக அறிமுகப்படுத்துவார். வாழையடி வாழையாக வந்த அனைத்து முற்றுப்பெற்ற ஞானிகளுக்கும் முருகனே குரு என்பதை அறிக. குருவாய் குகனை கொண்டால் குகனே சற்குருவை அறிமுகப்படுத்துவார். சீவன் சிவத்துடன் இரண்டறக் கலக்க ஞானத்தலைவன் முருகன் துணையின்றி வேறு எவராலும் முடியாது.. முருகா என்போம் முற்றுப்பெறுவோம்


#குரு = #முருகன்/ முருகனருளால் முற்றுப்பெற்ற சீடர்

"சிவனை வழிபட்டார்
எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு
ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு
ஆமாறு காட்டும்
குருவை வழிபடின்
(குரு = முருகன்)
கூடலும் ஆமே."
- திருமந்திரம் 2119

“குருவின் அடிபணிந்து
கூடுவதல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.”

"நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம்."

- ஆசான் ஒளவையார்

No comments:

Post a Comment