Sunday, March 20, 2016

வான்கலந்த மாணிக்கவாசகா

"வான்கலந்த மாணிக்கவாசகா
நின் வாசகத்தை 
நான்கலந்து பாடுங்கால் 
நற்கருப்பஞ் சாற்றினிலே 
தேன்கலந்து பால்கலந்து 
செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் 
ஊன்கலந்து உயிர்கலந்து 
உவட்டாமல் இனிப்பதுவே."

"வாட்டமிலா மாணிக்க வாசகா 
நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த 
கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா 
விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு 
நானடைதல் வியப்பன்றே!."
-ஆசான் வள்ளலார்

பெருமை பெற்ற மாணிக்கவாசகப் பெருமானே, நின்னுடைய திரு வாசகத்தை உணர்வு ஒன்றிப் பாடும் போது, நல்ல கருப்பஞ் சாற்றினில் தேனும் பாலும் நன்கு பழுத்த தூய கனியின் சாறும் கலந்தது போல என் உடலிலும் உயிரிலும் கலந்து உமட்டி யுமிழாவாறு இனிப்பு மிகுகிறது.   

No comments:

Post a Comment