Sunday, May 10, 2020

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு

சித்தபெருமானார் அகத்தியர் வாக்கு

பொதுநலவாதிகளைவிட சுயநலவாதிகள்தான் சுகமாக வாழ்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில், ஏன் இந்த மாறுபட்ட நிலை..?!

இறைவன் அருளால் சுகம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய் (மன நிம்மதி, வறுமையில்லாத நோய் நொடியில்லாத வாழ்வு). ஒன்றை புரிந்துகொள் ஒரு மனிதனுக்கு எந்த சூழலும் நிம்மதியையோ, சந்தோஷத்தையோ தருவதில்லை.
https://www.facebook.com/groups/305917699863621
அவனுடையை மன நிலையை பொறுத்துதான் வாழ்க்கை நிலை என்பது நிறைய தனம்தான் சந்தோஷம் என்றால் தனவான்கள் அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மிகப்பெரிய பதவிதான் நிம்மதி என்றால் பதவியில் இருக்கக்கூடியவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். ஆக ஒவ்வொரு மனிதனின் மனநிலை, மன பக்குவம், மன முதிர்ச்சி - இதை பொறுத்துதான் சுகமும், துக்கமும் உன் மனதை நீ திடமாக, வைரம்போல்
உறுதியாக, வைராக்யமாக, பெருந்தன்மையாக, நேர்மையாக நீதியாக, சத்திய நெறியில் வைத்துக்கொண்டால், இறை வழியில் செல்வதற்கு உன்னை தயார்படுத்திக் கொண்டால் நீ எங்கு இருந்தாலும் சுகமாக இருக்கலாம். நலமாக இருக்கலாம்.

எனவே சுகம் என்கிற லோகாய விஷயத்தைப் பார்த்து, அதை உன்னோடு ஒப்பிட்டு பார்த்து குழப்பம் கொண்டிட வேண்டாம். உன் தேவைகள் என்ன? என்பதை உன்னைப் படைத்த இறைவன் நன்றாக புரிந்திருக்கிறான். நோயுற்ற குழந்தைக்கு எதைத் தரவேண்டும்? ஆரோக்கியமான குழந்தைக்கு எதைத் தரவேண்டும்? என்பதை தாய் அறிவாள் என்பதைப் போலதான்.

உன்னுடைய துன்பம்‌ அல்லது உன்னொத்து உள்ளவர்களின்‌ துன்பத்திற்கு.காரணம்‌, முன்‌ ஜெனம பாவத்தின்‌ தாக்கம்‌ அந்தப்‌ பாவத்தை குறைத்து கொள்ளத்தான்‌ நாங்கள்‌ விதவிதமான வழிபாடுகளைக்‌ கூறுகிறோம்‌.

கண்ணீர மல்க எம்முன்னே அமருகின்ற ஒவ்வொரு மனிதனையும்‌ பாரக்க பரிதாபமாக இருந்தாலும்‌ அந்த மனிதன்‌ செய்த செயலால்‌ பாதிக்கப்பட்ட ஆத்மாவின்‌ கதறல்கள்‌ எம்‌ செவிகளில்‌ விழும்‌ சமயம்‌. இறைவன்‌ சரியாகத்தான்‌. ஒவ்வொரு மனிதனையும்‌ வைத்திருக்கிறார்‌ என்று எமக்குத்‌ தெரிகிறது
https://www.facebook.com/groups/305917699863621
அதையும்‌. தாண்டி எத்தனையோ பிறவிகளில்‌ நடந்ததையெல்லாம்‌ மறந்துவிட்டு இப்பொழுது
நாங்கள்‌ நல்லவர்களாக இருக்கிறோம்‌. எங்களை வாழவிடுங்கள்‌ என்று ஒவ்வொரு மனிதனும்‌ மெய்யாக மெய்யாக. மெய்யாக இறைவனை நோக்கி. வேண்டினால்‌ கட்டாயம்‌ நன்மைகள்‌ நடக்கும்‌ ஒருவன்‌ சுகமாக இருக்க வேண்டுமென்றால்‌ பிறர்‌ சுகத்தை கெடுக்கக்கூடாது ஒருவன்‌ நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால்‌ பிறர்‌ நிம்மதியை கெடுக்கக்கூடாது ஒருவன்‌ பிறரின்‌ வார்த்தைகளால்‌ காயப்படக்கூடாது என்றால்‌ பிறரை வார்த்தைகளால்‌ காயப்படுத்தாமல்‌ இருக்கவேண்டும்‌.

எனவே இதையெல்லாம்‌. மனதிலே வைத்துக்கொண்டு உன்னால்‌ முடிந்த உதவிகளை செய்துகொண்டு நீ உன்‌ பக்தி. வழியில்‌ தொடர்ந்து செல்ல. செல்ல உன்‌ வாழ்க்கையிலும்‌ நிம்மதி வரும்‌.

https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் அறிவியல்

No comments:

Post a Comment