Wednesday, May 10, 2017

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.

Contact தொடர்பு

என்றும் இளமையோடு வாழ சித்தர்பெருமானார் திருமூலர் கூறும் எளிய வழி! கடுக்காய் பற்றிய சில சித்தர் கூற்றுக்கள்: Videos



"கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்."

"ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்."

"சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை"


"கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்."




இதற்கு வேறு பெயர்களும் உண்டு . அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும் .

கடுக்காய் பல வகைகள் உண்டு . அவை :

கருங்கடுக்காய் 

செங்கடுக்காய் 

வரி கடுக்காய் 

பால் கடுக்காய் 

இவை அனைத்தும் வெவேறு வகைகளில் , நமக்கு பயன் தருவன.

நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் , நம் மன ரீதியான 

பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ?

மலச்சிக்கல் தான் . 

மலச்சிக்கல் ஏற்பட்டால் , மன உளைச்சல்  ஏற்படும் 

அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும் 

அதனால் கோபம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் .

மலச்சிக்கலால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்னை தாம்பதிய குறைபாடு .

இந்த தாம்பத்திய குறைபாடு , விந்தணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது .

இதனால்  தாம்பத்தியத்தை பாதிக்கிறது . 

மலச்சிக்கல் இன்றி இருந்தாலே , நம் முடிவுகள் பெரும்பாலும் சரியான முடிவுகளாக இருக்கும் . 

தாம்பத்திய குறைபாடு இன்றி இருந்தால் வாழ்வும் நன்முறையில் இருக்கும் .

கடுக்காய் இந்தப் பணியைச் சிறப்பாக செய்கிறது .

மலச்சிக்கல் தீர்க்கவும் , விந்தணுக்கள் பெருகவும் என. பல வகைகளில் இதன் பயன்கள் விரிந்து செல்கின்றன .

இந்த உலகின் இயற்கை கொடுத்த அனைத்தும் பயன்பாடு கொண்டதே ! ஆனால், எப்போது  பயன்படுத்துகிறார்கள் , எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம் . இதன் அடிப்படை யிலே தான் ஒரு பொருள் விஷம் ஆவதும் , மருந்தாவதும் உள்ளது .

இதற்கு கடுக்காயும் விதி விலக்கல்ல !

எனவே இதை பயன்படுத்தும் விதம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

சுக்குக்கு தோலில் விஷம்

கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்று  கூறுவது உண்டு .

எனவே இதன் கொட்டைகளை நீக்கி விட்டு தோல்  பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவு...ம் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?


அன்றாடம் நமது உணவில் கடுக்காய் பொடி சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் பொடி தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...



"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."


காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.


பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப்பயனை நீட்டித்து வருகிறது.



"கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும்

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய்

ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்

ஊட்டி உடல் தேற்றும் உவந்து."

என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப்

புகழ்கிறது. 

சிறு குழந்தைகளுக்கு சந்தனக்கல்லில் சிறிது உரசி இழைத்து பாலில் கலந்து புகட்டலாம். காது நோய்களுக்கும் கண்கண்ட மருந்தாகத் திகழ்கிறது. கடுக்காய் கொடுத்து விட்டான் என்று ஏமாற்றி மோசம் செய்பவர்களைக் குறிப்பிடுவார்கள்....

புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது.

சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுக்காயை உபயோகிக்கும் போது அதை உடைத்து அதில் உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .


சித்தர் அறிவியல் Wisdom of Siththars

Aum Muruga ஓம் மு௫கா




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 

No comments:

Post a Comment