Monday, June 19, 2017

இதில் நீங்கள் யார்..??!!


1. மரணத்தை வெல்லவே, மனிதன் பிறக்கிறான் என்ற உண்மை அறியாதவர்.
2. இந்த உண்மை அறிந்து மரணத்தை வென்ற மனிதர்களே “கடவுள்” என்றறியாதவர்.
3. ஆசான் முருகப்பெருமான் மதம் சார்ந்த கடவுள் என நினைத்து ஏமார்ந்தவர்.
4. கடவுளை வணங்குவதே நாம் கடவுள்தன்மை பெறுவதற்கு என்றறியாதவர்.
5. இந்த உண்மை அறிந்தும் பணத்தை மட்டும் தேடி இறந்துபோகின்றவர்.
6. அப்படி இறந்தால் மீண்டும் பிறந்தாகவேண்டும் என்ற உண்மை அறியாதவர்.
7. நம் உடம்பில் உள்ள உயிரே, படைத்த இயற்கை (சிவன்) என்று அறியாதவர்.
8. இயற்கை அன்னையை (சிவன்) யாராலும் வணங்க முடியாது என்று அறியாதவர்.
9. இயற்கை அன்னை (சிவன்) ஒரு இயக்கம் என்று அறியாதவர்.
10. ஒரு குழந்தை துடிதுடித்து இறப்பதும், பாவத்தின் கழிவிடை என்று அறியாதவர்.
11. நாம் அனுபவிக்கும் வலி, நம் பாவத்தின் கழிவிடை என்று உணராதவர்.
12. புண்ணியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்.
13. பணம் வருவது புண்ணியம் என்றும், அது சேருவது பாவம் என்றறியாதவர்.
14. சேரும் பணம் மற்றும் நகை அடுத்த பிறவியின் அதிக வறுமை என்றறியாதவர்.
15. ஒரு துண்டு கறிசோறு (non-veg) ஓராயிரம் துன்பம் தரும் என்று அறியாதவர்.
16. மேற்கண்டவை உண்மையா என அறிய, கடவுள் (ஞானிகள்) திருவடி துணைவேண்டும் என்ற உண்மை அறியாதவர்.

“ஓம் சர்வலோக சித்தர்கள் திருவடிகள் போற்றி”

No comments:

Post a Comment