Friday, April 3, 2020

பசிப்பிணி போக்குவோம், மக்கள் தொண்டுகள் செய்வோம் வாருஙகள்

பசிப்பிணி நீக்கும் உத்தமர் மகான் அரங்கமகாஅடிகளார். 40+ ஆண்டுகளாகத் துறையூர் ஓங்காரக்குடிலில் பசிப்பிணி போக்கும் அணையா அடுப்பு.

*அஞ்சாதீர்* என்று யுகயுகத்தும் தோன்றும் *அகத்தியனை* அருட்குருவை அகத்துள் வைப்போம்.

எங்கெங்கு பார்த்தாலும் நோய்களும், பசிபட்டினியும், கொடுமைகளும், வன்முறைகளும், திருட்டுகளும், ஏமாற்றுதலும், வஞ்சனைகளாகவும் நடந்து கொண்டும் பண்புள்ள மக்கள் , வசதியில்லாத மக்கள் வாழ்வதற்கே தினந்தினம் அச்சத்தோடும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று மனம் பதைத்து தடுமாறுகின்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கலியுகத்தில் தீமைகளை கட்டுப்படுத்தி நன்மைகளைப் பெருக்கி அராஜகவாதிகளை கண்டித்து பண்புள்ளவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழை, எளியோர், பஞ்சபராரிகளுக்கு அரணாகவும் இருந்து இக்கொடுமையான கலியுகத்தின் இடர்களை, களைதல் பொருட்டு ஆசான் ஆறுமுகப் பெருமானே இக்கலிகாலத்தில் தோன்றி தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், துறையூரில் அரங்கமகாஅடிகளாராக உருவாகி வடிவெடுத்து மாதவங்கள் பல செய்து எண்ணிலா ஆற்றல்கள் பெற்று ஆறுமுகனின் வேல்படை துணையுடனும் ஆறுமுகனின் தலைமையிலும் ஆறுமுகனின் முதன்மைச் சீடர் மகான் அகத்திய முனிவரின் தலைமை பொறுப்பேற்க அவரது திருக்கூட்டமான நவகோடி சித்தரிஷி கணங்கள் துணையுடன் இவ்வுலகைக் காக்க வேண்டி அரங்கமகாதேசிகர் தலைமையில் ஓங்காரக்குடில்வாழ் தொண்டர்கள் சூழ ஞானசபையொன்றை அமைத்து இவ்வுலகை காக்க உத்தேசித்து கலியுகத்தை காக்க வந்த ஞானிகள் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வருகின்றார்.
https://www.facebook.com/groups/305917699863621
உலக மக்களின் பசிப்பிணி அகற்றுதல் பொருட்டு கும்பமுனியாகிய மகான் அகத்தியரின் பெயரால் சங்கம் அமைத்து பசியென்று வந்தோர்க்கெல்லாம் இல்லையெனாது வாரிவாரி வழங்கி உணவளித்து யாரும் சிந்திக்கக்கூட முடியாத அளவிற்கு பலகோடி மக்களுக்கு அன்னதானம் செய்து பெரும் தருமப்பலனைப் பெற்று உலக ஞானிகளையெல்லாம் தமது அன்பால் கவர்ந்து தாம் செய்கின்ற அறப்பணிகளுக்கெல்லாம் அவர்களையே துணையாக்கி முற்றுப்பெற்ற அருள் ஞானிகளை வணங்கினால்தான் ஞானம் பெற முடியும் என்பதையும், ஞானிகளாகிய “குரு அருள் இல்லையேல் திருஅருள் இல்லை” என்பதை உலக மக்களின் வேதவாக்காக அமைத்து உலகோர் எல்லாம் ஞானியர் வழிபாட்டின் மகத்துவத்தை உணரச்செய்து வழிநடத்தி வருகின்ற உத்தமர் மகான் அரங்கமகாஅடிகளார்.

உலகாளும் வள்ளல், உலகில் நிகழவிருக்கின்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மீட்க வந்த அரசனே அரங்கனே! அகத்தியனே! அறுமுகனே! இப்படி பல பெயர்களில் அழைத்தாலும் தோன்றுவது உமது வடிவமே! அது அரங்கமகாஅடிகளாரின் அருள் வடிவமே! எப்படி யாரை அழைத்தாலும் அறுமுகனின் அவதாரமாக அங்கு தோன்றுவதும் அரங்கனே!

-மகான் சட்டைநாதர்
தமிழகம் எங்கும் துறையூர் ஓங்காரக்குடில் அன்பர்கள் பசிப்பிணி ஆற்றுகிறார்கள். பசித்தோர் முகம் பார், இறைவன் கடைக்கண் பார்வை கிடைக்கும். சீவதயவே இறைவன் விரும்பும் வழிபாடு.

தமிழகம் எங்கும் துறையூர் ஓங்காரக்குடில் அன்பர்கள் பசிப்பிணி ஆற்றுகிறார்கள். பசித்தோர் முகம் பார், இறைவன் கடைக்கண் பார்வை கிடைக்கும். சீவதயவே இறைவன் விரும்பும் வழிபாடு.


Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Posted By Nathan Surya

No comments:

Post a Comment