Wednesday, April 22, 2020

Siththars' urgent call for humanity சித்தர்கள் அவசர அறைகூவல்

*சித்தர்கள் அவசர அறைகூவல்..!*
*மாந்தரே..! எம் சேய்களே..! தீதும் நன்றும் உம் செயலே..!* கருணைபடக் கூறுகிறோம் மாந்தரே கடவுளையோ/ இயற்கையையோ குறைகூறிப் பலன் ஏதுமில்லை. கருணைமிகு மானிடரே தீதும் நன்றும் கடவுளோ/ இயற்கையோ தந்து வருவதில்லை. படும் வேதனைகள் எல்லாம் வினைக்குற்றமே (சிந்தை, சொல், செயல் குற்றங்கள்) அன்றி வேறேதுமில்லை. சக மனிதருக்கும், வாயில்லா உயிர்களுக்கும் நீங்கள் காலங்காலமாகச் செய்த தீவினையின் உச்சமே உங்களை அழிக்கும் அச்சமாக மாறியுள்ளது. மன்னிப்புக் காலம் முடிந்துவிட்டது. கிருமித்தொற்று சில மாதங்களில் குறையும். மீணடும் உங்கள் சிந்தை, சொல், செயல்களை மாற்றாவிட்டால் நச்சுக்கிருமிகள் முதற்கொண்டு இயற்கை கோரத் தாண்டவம் ஆடுமென கருணையுடன் எச்சரிக்கிறோம். எல்லா உயிர்களையும் உங்கள் உயிர்போல் பாருங்கள். காலங்காலமாக உங்கள் முன்னோர் முதற்கொண்டு செய்த பாவமூட்டைகள் மன்னிக்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. *கருணை இழப்பீரானால் கருணையின்றி அழிவைச் சந்திப்பீர்கள். * உங்கள் பாற் கொண்ட அக்கறையால் கூறுகிறோம் சீவதயவுடன் இருங்கள். உங்களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளுக்கு நீங்களே பொறுப்புதாரிகள். அச்சம் வேண்டாம் கருணைபட வாழுங்கள் உங்கள் எதிர்காலம் நலமாகும் வளமாகும். சுபம்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி



#ongarakudil #ஓங்காரக்குடில் #covid19

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்

No comments:

Post a Comment